Saturday, October 22, 2022

Samacheer Kalvi 6th Tamil Manappada Paguthi (தமிழ் 6 மனப்பாட பகுதி )

Term I

1. இன்பத்தமிழ் 

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

 

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

 

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! 

- பாரதிதாசன் 


2. சிலப்பதிகாரம்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான். 

- இளங்கோவடிகள் 


3. காணி நிலம் 

காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும் – அங்குத்

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் – அந்தக்

காணி நிலத்திடையே – ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் – அங்குக்

கேணி அருகினிலே – தென்னைமரம்

கீற்றும் இளநீரும்

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

பக்கத்திலே வேணும். 

- பாரதியார் 


4. திருக்குறள் 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.


இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

- திருவள்ளுவர் 






Term II

1. மூதுரை 

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் 

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு. 

- ஒளவையார்    



2. திருக்குறள் 

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து. 


வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு. 


சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயன்இலாச் சொல். 

- திருவள்ளுவர் 



3. கடலோடு விளையாடி 

பாயும்புயல்  நம்ஊஞ்சல் – ஐலசா 

பனிமூட்டம் உடல்போர்வை  – ஐலசா

காயும்கதிர்ச் சுடற்கூரை  – ஐலசா

கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா

மினனல்வரி அரிச்சுவடி – ஐலசா

பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா

முழுநிலவே கண்ணாடி – ஐலசா

மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா

தொழும்தலைவன் பெருவானம்  – ஐலசா

துணிவோடு தொழில்செய்வோம்  – ஐலசா



Term III

1. பாரதம் அன்றைய நாற்றங்கால் 

புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்!

கல்லைக் கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்! 


அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள்பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்று கோலாக


புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது!

- தாராபாரதி 


2. பராபரக் கண்ணி 

தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்

செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!


எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!

- தாயுமானவர் 



3. திருக்குறள்  

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

- திருவள்ளுவர் 





 

No comments:

Post a Comment

Samacheer Kalvi English Memory Poems

 Memory Poems 1. 6th Standard 2 . 7th Standard 3. 8th Standard 4. 9th Standard 5. 10th Standard If there was any mistake in the poems please...